தலைப்பிறை தென்படவில்லை; வௌ்ளிக்கிழமை (24) நோன்பு ஆரம்பம்

by Bella Dalima 22-03-2023 | 8:08 PM

 Colombo (News 1st) நாட்டின் எந்த பகுதியிலும் இன்று புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

அதன்படி, ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,  நாளை மறுதினம் (24) வௌ்ளிக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் பிறைக்குழு ஒன்றுகூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 

ஏனைய செய்திகள்