English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Mar, 2023 | 6:32 pm
Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கான அனுமதிப்பத்திர விநியோகத்திற்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி பிணைக்கான கட்டணம் 7,50,000 ரூபாவில் இருந்து 3 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வருடத்திற்கு பின்னர் அதனை 5 மில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவர் நிலையங்களூடாக வௌிநாடுகளுக்கு செல்வோருக்கான ஒப்பந்தத்திற்கு அமைய, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் செலுத்தப்படாவிடின், அது குறித்து கிடைக்கும் முறைப்பாட்டிற்கு அமைய சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கும், மேலதிக கட்டணங்களை அறவிடவும் தேவையான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டணங்களை குறித்த முகவர் நிலையங்கள் செலுத்தாவிடின், முகவர் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும் வங்கி பிணை கட்டணத்திலிருந்து அதனை சட்ட ரீதியாக அறவிட முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, முகவர் நிலையங்களுக்கு கடுமையான ஒழுங்குபடுத்தல்களை அமுல்படுத்தவும் எதிர்பார்ப்பதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
28 May, 2023 | 06:34 PM
28 May, 2023 | 03:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS