பஸ்பாகே கோறளை – ஹைன்போர்ட் தோட்டக் காணியை வௌ்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

பஸ்பாகே கோறளை – ஹைன்போர்ட் தோட்டக் காணியை வௌ்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

பஸ்பாகே கோறளை – ஹைன்போர்ட் தோட்டக் காணியை வௌ்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2023 | 7:12 pm

Colombo (News 1st) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி – பஸ்பாகே கோறளை, ஹைன்போர்ட்  தோட்டக் காணியை வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கண்டி – நாவலப்பிட்டி, பஸ்பாகே கோறளையிலுள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட்  தோட்டக் காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்