3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 19-03-2023 | 3:32 PM

Colombo (News 1st) பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்போரை அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய, மண்சரிவு, கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்