![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) திருகோணமலை - கோமரங்கடவல, திம்பிரிவெவ மற்றும் கிரிந்த பலாட்டுபான பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நில அதிர்வுகள் நாட்டின் அனைத்து நில அதிர்வு மானிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.
கிரிந்த பலாட்டுபான பகுதியில் நேற்று(18) மாலை 6.46 அளவில் 2.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இன்று(19) காலை 03.30 அளவில் திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
பதிவாகிய குறித்த நில அதிர்வுகள் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.