.webp)
Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டுக்கான 7 ஆவது கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 பேர் விண்ணப்பித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்காக குறித்த கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை நடத்தப்படுகிறது.
கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக அதிகளவானோர் விண்ணப்பித்துள்ள சந்தர்ப்பம் இதுவென வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக 31,378 பேர் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.
இதனிடையே, இம்முறை கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழி பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், கடற்றொழில் துறை வேலைவாய்ப்பிற்கான பரீட்சை செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பரீட்சைகள் பன்னிப்பிட்டிய கொரிய கணினி பரீட்சை மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.