யாழ். நாவற்குழியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல்

by Bella Dalima 17-02-2023 | 5:52 PM

Colombo (News 1st) யாழ். நாவற்குழியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின்  ஊழியர் மீது  வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின்  ஊழியர் QR குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கு மறுத்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

நேற்றிரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

QR குறியீடு இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சித்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளனர். 

அவர்களில்  ஒருவர்  ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.