.webp)

Colombo (News 1st) அளுத்கம, குருந்திபிட்ட பிரதேசத்தில் தலைக்கவசங்களால் தாக்கி நபரொருவரை கொலை செய்த 16 வயதான பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(14) மாலை வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, 16 வயதான 03 மாணவர்கள் தலைக்கவசங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலகெதர - குருந்திப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
