பெரும்போக நெல் கொள்வனவு இன்று(15) முதல் ஆரம்பம்

பெரும்போக நெல் கொள்வனவு இன்று(15) முதல் ஆரம்பம்

by Staff Writer 15-02-2023 | 7:44 AM

Colombo (News 1st) பெரும்போக நெல் கொள்வனவு இன்று(15) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, 14 வீத அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச தானிய உள்ளடக்கம் 9 வீதம் கொண்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

14 வீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல்லை 88 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.