மொறட்டுவையில் 16 வயது சிறுவனின் சடலம் மீட்பு

மொறட்டுவை - எகொடஉயன கரையோர பகுதியில் 16 வயது சிறுவனின் சடலம் மீட்பு

by Bella Dalima 11-02-2023 | 3:46 PM

Colombo (News 1st) மொறட்டுவை - எகொடஉயன கரையோர பகுதியில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று (10) மாலை மொரட்டுவெல்ல கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

மீட்கப்பட்ட சடலம் குறித்த 16 வயது சிறுவனின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.