.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, சுய நிர்ணய உரிமையைக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, பரமேஷ்வரா சந்தி வரை சென்று பின்னர் அங்கிருந்து கந்தர்மடத்தினூடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை சென்றடைந்தது.
இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.