Colombo (News 1st) A.H.M.பௌசி பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக A.H.M.பௌசியின் பெயர் அண்மையில் வர்த்தமானியில் வௌியிடப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, முஜிபுர் ரஹ்மான் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட, A.H.M.பௌசி 48,701 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.