Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(08) ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி இன்று(08) காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டதொடரை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்றைய நிகழ்வை எளிமையாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், முப்படை மரியாதை மற்றும் அணிவகுப்பு என்பன இடம்பெற மாட்டாது எனவும் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படமாட்டாது எனவும் பாராளுமன்றம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.