மீட்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தீர்மானம்

துருக்கியில் முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை தீர்மானம்

by Staff Writer 06-02-2023 | 9:40 PM

Colombo (News 1st) துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் இடிந்து வீழ்ந்த கட்டடங்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியூடாக இது குறித்து அந்நாட்டு வௌிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.