ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகையின் இறுதி கிரியைகள் நிறைவு

ஓய்வுநிலை பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகையின் இறுதிக் கிரியைகள் நிறைவு

by Chandrasekaram Chandravadani 06-02-2023 | 7:33 PM

Colombo (News 1st) காலஞ்சென்ற முன்னாள் கொழும்பு பேராயர், கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகையின் இறுதிக் கிரியைகள் கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் இன்று(06) மாலை இடம்பெற்றன. 

நித்திய இளைப்பாறுதல் அடைந்த கொழும்பு ஓய்வுநிலை பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகையின் வித்துடல், அவர் வேந்தராக கடமையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன் பின்னர் கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்திற்கு வித்துடல் கொண்டுவரப்பட்டதுடன், பெருமளவிலானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால், மறைந்த பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகைக்கு ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பின்னர் புனித லூசியா பேராலய வளாகத்தில் ஆண்டகையின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.