காவலில் ஈடுபட்டிருந்த 4 பிள்ளைகளின் தந்தை யானை தாக்கியதில் உயிரிழப்பு

by Staff Writer 05-02-2023 | 5:14 PM

Colombo (News 1st) இறக்காமம் - வாங்காமம் கிராமத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்றிரவு(04) வயல் வௌிக்கு காவலுக்கு சென்ற விவசாயியே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் அக்கரைப்பற்று - பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த 47 வயதான றாசிக் முஸாதிக் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

அம்பாறை பொது வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.பி.கருணாரத்ன சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.