சுதந்திர தினத்தை ஆதரித்து பேரணிகள் முன்னெடுப்பு

75 ஆவது சுதந்திர தினத்தை ஆதரித்து பேரணிகள் முன்னெடுப்பு

by Bella Dalima 04-02-2023 | 7:48 PM

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஆதரித்து பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன

யாழ். சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த்தன்  உள்ளிட்ட சில தரப்பினரால்  பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ். பண்ணை கடற்கரையில் ஆரம்பித்த பேரணி யாழ். நகரை சுற்றி முன்னெடுக்கப்பட்டது. 
 
இதனிடையே, வவுனியாவில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியம் அமைப்பினரினால் வாகனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வாகனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.