இலங்கை அகதிகள் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கை அகதிகள் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

by Bella Dalima 04-02-2023 | 6:04 PM

Colombo (News 1st) இலங்கை அகதிகள் நால்வர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், படகு மூலம் தனுஷ்கோடி - ஒத்தப்பட்டி கடற்கரையை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் நால்வரையும் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற கரையோர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.