English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Feb, 2023 | 5:35 pm
Colombo (News 1st) இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தின் சில பகுதிகளில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக இந்த கடையடைப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடையடைப்பு காரணமாக வர்த்தக நிலையங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தனியார் பஸ் சேவைகள் இன்று இடம்பெறவில்லை. இலங்கை போக்குவரத்து சபை சேவைகள் மாத்திரமே இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் – மல்லாவி, துணுக்காயிலும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. போக்குவரத்து முடங்கியிருந்ததுடன், குறித்த பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன.
29 Nov, 2023 | 07:24 PM
29 Nov, 2023 | 05:34 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS