.webp)
Colombo (News 1st) மருதானையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பாரிய செலவில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.
'சுதந்திரத்திற்கான சத்தியாகிரகம்' என இதற்கு பெயரிடப்பட்டது.
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பங்கேற்றோரும் சில சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் சத்தியாகிரகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
சத்தியாகிரகம் நாளை (04) மாலை 3.30 மணி வரை நடைபெறும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.
எனினும், அங்கிருந்து வௌியேறுமாறு அவர்களை பொலிஸார் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.