English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Feb, 2023 | 8:08 pm
Colombo (News 1st) இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட13 ஏக்கர் அரச காணி உள்ளிட்ட 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது
யாழ் – பலாலி, அந்தோனிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்பிற்கான உத்தரவு பத்திரத்தினை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட, யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் கையளித்தார்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை – மத்தியில் 50.59 ஏக்கரும் மயிலிட்டி வடக்கில் 16.55 ஏக்கரும் தென்மயிலை பகுதியில் 0.72 ஏக்கரும் பலாலி வடக்கில் 13.033 ஏக்கரும் நகுலேஷ்வரம் பகுதியில் 28 ஏக்கரும் விடுவிக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, நகுலேஷ்வரத்தில் விடுவிக்கப்பட்ட 28 ஏக்கர் காணியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
29 Mar, 2023 | 10:16 PM
29 Mar, 2023 | 05:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS