4 மாகாணங்களில் இன்றிரவு(30) கடும் மழை

4 மாகாணங்களில் இன்றிரவு(30) கடும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

by Chandrasekaram Chandravadani 30-01-2023 | 3:55 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு(30) முதல் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக குறித்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.