இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் பலி

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 30-01-2023 | 3:09 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று(29) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று குறுக்கு வீதியில் இருந்து பிரதான பாதைக்கு பிரவேசித்த போது பிரதான வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சங்கத்தானை - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.