கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2023 | 2:39 pm

Colombo (News 1st) திருகோணமலையிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற 5 மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 'தரு ரஷ்மி' எனும் மீன்பிடி படகு மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூஸ்பெஸ்ட் மேற்கொண்ட விசாரணையில், இந்த விடயம் தொடர்பான தகவல்களை கோரி மியன்மாருக்கு தகவலொன்று அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

எனினும், இதுவரையில் எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என கடற்படை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்