English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Jan, 2023 | 6:44 pm
Colombo (News 1st) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக P.M.S.சார்ள்ஸ் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக P.M.S.சார்ள்ஸ் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினூடாக தெரியப்படுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக எந்தவொரு உறுப்பினரும் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.
P.M.S.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
19 Mar, 2023 | 06:32 PM
19 Mar, 2023 | 03:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS