கொலையில் முடிந்த காணிப் பிரச்சினை

கொலையில் முடிந்த காணிப் பிரச்சினை

by Staff Writer 29-01-2023 | 6:47 PM

Colombo (News 1st) புல்மோட்டை பகுதியில் காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வயல் நிலம் தொடர்பில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

41 மற்றும் 45 வயதான இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மோதலில் காயமடைந்த மேலும் இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், புல்மோட்டை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.