.webp)
Colombo (News 1st) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று(28) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மவுண்ட் வர்ணன் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, மட்டக்களப்பு - கிரான்குளம் பகுதியில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் வெள்ளநீர் தேங்கியிருந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.