English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jan, 2023 | 4:05 pm
Colombo (News 1st) இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பில் ஆணைக்குழுக்கள் முன்வைத்த அறிக்கைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
நாட்டில் மனித உரிமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விசாரணைகளை ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைக்க இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
உதாகம, பரனகம உள்ளிட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளதுடன், 300-க்கும் மேற்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது வரையில், இரண்டு இடைக்கால அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் நியூஸ்பெஸ்டிற்கு தெரிவித்தார்.
31 Mar, 2023 | 10:17 PM
31 Mar, 2023 | 08:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS