.webp)
Colombo (News 1st) அனுராதபுரம் - எலயாபத்துவ, மான்கடவெல பகுதியில் வீடொன்றில் பரவிய தீயில் தாயும் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு இந்த தீ விபத்து பதிவாகியுள்ளது.
தீயில் 30 வயதான தாயும் 10 வயதான மகளும் 05 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை காப்பாற்றச்சென்ற தந்தை காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.