வசந்த முதலிகேவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வசந்த முதலிகேவிற்கு பெப்ரவரி 8 வரை விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 25-01-2023 | 7:26 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். 

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

வசந்த முதலிகே உள்ளிட்ட 73 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.