நாவிதன்வெளி பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அந்தோனி சுதர்சன் தெரிவு

by Staff Writer 25-01-2023 | 11:07 AM

Colombo (News 1st) அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியின் அந்தோனி சுதர்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நாவிதன்வெளி பிரதேச சபையின் இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் கடந்த மாதம் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, தோல்வியடைந்தது. 

இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் நேற்று(24) நடைபெற்றது. 

இதன்போது அ.சுதர்சன், சி.குணரெட்ணம், கி.யோகநாயகன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டன. 
 
வாக்கெடுப்பின் போது 07 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் அந்தோனி சுதர்சன், பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். 

வாக்கெடுப்பின் போது பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 13 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

ஏனைய செய்திகள்