கப்ராலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கை மீளப் பெற்றார் தீனியாவல பாலித்த தேரர்

by Staff Writer 25-01-2023 | 8:08 PM

Colombo (News 1st) முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட வழக்கை தீனியாவல பாலித்த தேரர் இன்று மீளப் பெற்றார்.

இதற்கமைய, குறித்த வழக்கில் இருந்து அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்வதற்கான உத்தரவு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவால் பிறப்பிக்கப்பட்டது. 

மீண்டும் வழக்கை தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், முறைப்பாட்டில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை மீளப்பெறுவதாக தீனியாவல பாலித்த தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.