கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

ஜனவரி 21 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

by Bella Dalima 19-01-2023 | 3:33 PM

Colombo (News 1st) கொழும்பு - தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (21) சனிக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அன்று காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

இந்த காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்த, முல்லேரியா பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.