Colombo (News 1st) களுத்துறை ரயில் நிலையத்தில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.
இன்று(19) காலை 07 மணிக்கு களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ள நிலையில், ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.