.webp)
Colombo (News 1st) தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக இந்த சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் பங்கேற்கவில்லை.