கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

by Bella Dalima 18-01-2023 | 7:07 PM

Colombo (News 1st) கொழும்பு - கொட்டாஞ்சேனை, 06 ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இன்று பிற்பகல் 1.30 அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, காரில் இருந்த கொட்டாஞ்சேனை - ஜினாநந்த மாவத்தையை சேர்ந்த 30 வயதான ரவீந்திரன் தீபன் என்பவர் காயமடைந்துள்ளார்.

திலீபன் என அறியப்படும் குறித்த நபர், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கிம்புலா எலே என அழைக்கப்படும் சின்னையா குணசேகரனின் உறவினர் ஆவார்.

கிம்புலா எலே குணா, தற்போது இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அவரின் உறவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, காயமடைந்த நபர் தொடர்பில் விசாரிப்பதற்காக வருகை தந்த நபர் மீது, உறவினர்களால் வைத்தியசாலை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான நபர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.