Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பிரத்தியேக இல்லத்தில் விருந்தினர்களுக்கான பதிவேடுகள் எவையும் இல்லை என வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தெல்வெயாரிலுள்ள (Delaware) இல்லத்திலிருந்து வகைப்படுத்தப்பட்ட அரச ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்த இல்லத்திற்கு சென்று வந்தவர்களுடைய விபரங்களை பார்வையிட வேண்டுமென குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே வௌ்ளை மாளிகை இதனைக் குறிப்பிட்டது.
ஜனாதிபதிகளின் பிரத்தியேக இல்லங்களுக்கு செல்பவர்களுடைய விபரங்களை பேணும் முறைமையொன்று இல்லை என வௌ்ளை மாளிகையின் சட்டப்பிரிவு கூறியுள்ளது.
வொஷிங்டனில் ஜனாதிபதி பைடன் முன்னர் பயன்படுத்திய அலுவலகம் மற்றும் தெல்வெயாரிலுள்ள பிரத்தியேக இல்லத்திலிருந்து குறைந்தது 20 அரசாங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.