நேபாள விமான விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

நேபாள விமான விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

by Staff Writer 15-01-2023 | 3:29 PM

Colombo (News 1st) நேபாளத்தின் Pokhara பகுதியில் 72 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று இன்று(15) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதுவரை குறைந்தது 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய நேபாளத்தின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமான நிலையங்களுக்கு இடைப்பட்ட பயண நேரம் 25 நிமிடங்கள் எனவும் விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களில் இந்த விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 பயணிகள் மற்றும் 04 விமான ஊழியர்கள் குறித்த விமானத்தில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

விபத்து ஏற்பட்டமைக்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.