ஜனவரி 16 முதல் நாளாந்தம் 30 ரயில் சேவைகள் இரத்து

ஜனவரி 16 ஆம் திகதி முதல் நாளாந்தம் 30 ரயில் சேவைகள் இரத்து

by Bella Dalima 13-01-2023 | 5:40 PM

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாளாந்தம் 30 ரயில் சேவைகளை இரத்து செய்யவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அலுவலக ரயில் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பல குறுந்தூர ரயில்களை  இரத்து செய்யவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரயில்வே திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் காமினி செனவிரத்ன இதனை குறிப்பிட்டார்.