வட்டுக்கோட்டையில் கடலில் தவறி வீழ்ந்து மீனவர் பலி

வட்டுக்கோட்டையில் கடலில் தவறி வீழ்ந்து மீனவர் பலி

by Staff Writer 03-01-2023 | 6:44 PM

Colombo (News 1st) யாழ். வட்டுக்கோட்டை, திருவடிநிலை கடற்பரப்பில் மீனவர் ஒருவர்  இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று அதிகாலை மூன்று மீனவர்களுடன் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன்பிடியில் ஈடுபட்டபோது இவர் கடலில் தவறி வீழ்ந்ததையடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த 61 வயதானவர் என   பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.