தாழமுக்க நிலை நாளை(26) மேற்கு கடற்கரையை நோக்கி...

தாழமுக்க நிலை நாளை(26) மேற்கு கடற்கரையை நோக்கி...

by Staff Writer 25-12-2022 | 7:55 PM

Colombo (News 1st) நாட்டை ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம், நாளை(26) மேற்கு கடற்கரையை நோக்கி பயணிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய, சபரகமுவ, மேல், தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் கூறியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன் நாட்டை ஊடறுத்து 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.