இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ். கடல் பிராந்தியத்தில் கைதான 12 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

by Rajalingam Thrisanno 22-12-2022 | 8:30 PM

யாழ். கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக பருத்தித்துறை நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை இன்று உத்தரவிட்டார்.

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்று முற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது ட்ரோலர் படகுடன் 12 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் SEA OF SRI LANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.