நத்தார் பண்டிகைக்காக விசேட ரயில் சேவை

நத்தார் பண்டிகைக்காக விசேட ரயில் சேவை

by Rajalingam Thrisanno 22-12-2022 | 4:20 PM

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 08 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் 03 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. 

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.