பல பிரதேசங்களில் கடும் மழை

பல பிரதேசங்களில் இன்று(20) கடும் மழை

by Staff Writer 20-12-2022 | 7:58 AM

Colombo (News 1st) வட கிழக்கு பருவப்பெயர்ச்சி மழைக்கான மேகக்கூட்டங்கள் நாட்டை அண்மித்து உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 மில்லி மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, மேல், மத்திய, சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.