பலாலியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

by Staff Writer 20-12-2022 | 8:42 AM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

56 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து காணாமல் போன மீனவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.