பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இராஜினாமா

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இராஜினாமா

by Staff Writer 19-12-2022 | 9:32 PM

Colombo (News 1st) இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை தவிசாளர் 
ஜோசப் இருதயராஜா பதவி விலகியுள்ளார்.

கடந்த 05ஆம் திகதி கொண்டுவரப்பட்ட  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும்(19) வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜாவை பதவி விலகுமாறு கோரியதையடுத்து அவர் திடீரென பதவி விலகியுள்ளார்.

புதிய தவிசாளர் தெரிவாகும் வரை சபை நடவடிக்கைகள் இடம்பெறாது என பருத்தித்துறை நகர சபை செயலாளர் அறிவித்துள்ளார்.