2022 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஆர்ஜென்டீனா

2022 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது ஆர்ஜென்டீனா

by Staff Writer 18-12-2022 | 11:23 PM

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஆர்​ஜென்டீனா  வெற்றிவாகை சூடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டீன அணிகள் மோதின.

போட்டிக்கான மேலதிக நேர முடிவில் இரு அணிகளும் தலா 03 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.

அதற்கமைய, வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் ஆர்ஜென்டீனா, 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

ஆர்ஜென்டீன அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.