Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்காக மூவர் அடங்கிய தெரிவுக்குழு உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலனி குணரத்ன, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேரா மற்றும் முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி சுனில் சிறிசேன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் அடுத்த வருடம் மே 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.