இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்

by Staff Writer 15-12-2022 | 6:37 AM

Colombo (News 1st) 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரெஞ்ச் அணி தகுதி பெற்றுள்ளது.

மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்.

பிரான்ஸ் சார்பில் போட்டியின் 5ஆவது நிமிடத்தில் Theo Hernandez மற்றும் 79 ஆவது நிமிடத்தில் Randal Kolo Muani
ஆகியோர் கோல் போட்டனர்.

எனினும், மொரோக்கோ அணியினால் கோல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா மற்றும் பிரெஞ்ச் அணிகள் மோதவுள்ளன.