அரையிறுதிக்கு குரோஷியாவும் அர்ஜென்டினாவும் தகுதி

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: அரையிறுதி சுற்றுக்கு குரோஷியாவும் அர்ஜென்டினாவும் தகுதி

by Staff Writer 10-12-2022 | 3:38 PM

Colombo (News 1st) உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரோஷியாவும் அர்ஜென்டினாவும் தகுதி பெற்றுள்ளன.

பலம் பொருந்திய பிரேசில் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது
 
இதனிடையே, பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி நெதர்லாந்தை வீழ்த்தி 2022 உலகக்கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

கத்தாரின் லுசேல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

இதனிடையே, 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று  நடைபெறவுள்ளன.

இன்றைய முதல் போட்டியில் மொரோக்கோ மற்றும் போர்த்துகல் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8:30 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய இரண்டாவது போட்டியில் நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி  நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.